BREAKING NEWS

Jul 5, 2013

யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது: ஜனாதிபதி

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. எவரும் தனது சொந்த தேவைகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சீனாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலை இன்று வைபவரீதியாக திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட மத்தினராலேயோ நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது. இந்நாட்டில் வாழும் அனைவரும் சமமான உரிமைகளை அனுபவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

அந்தவகையில் இந் நாட்டில் வாழும் சகல இனத்தவரையும் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. எனவே தீவிரவாதத்தை விடுத்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &