கடந்த 20ம் திகதி பிரித்தானியாவில் இலங்கை அணிக்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.
17ம் திகதி தமிழர்களை தாக்கிய சிங்களவர்களுக்கு பாடம் புகட்டி அனுப்பினார்கள், அதற்கு முன்பு விளையாட்டு மைதானத்திற்குள் சென்றும் பிரச்சாரங்களை பல விதமாக முன்னெடுத்தார்கள்.
இதைக் கவணித்துக் கொண்டிருந்த மிகவும் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரரான கவாஸ்கர் அவர்கள் அங்கு போராட்டம் நடத்திவர்களை சந்தித்து போராட்டத்திற்கான காரணங்களை ஆர்வத்துடன் கேட்டு அறிந்துகொண்டார்.
கடந்த 17ம் திகதி தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்ந்து, தமிழர்களை இன அழிப்பு செய்தது என அனைத்தையும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விளங்கப்படுத்தினார்கள்.
மிகவும் ஆதராவாக பேசிய கவாஸ்கர், உங்கள் போராட்டத்தில் நியாயம் உள்ளது என கூறியதோடு, வாழ்த்துக்களையும் கூறியதோடு தமிழர்கள் கொண்டுவந்த பிரசுரங்களையும் வாசிப்புக்காக கையோடு வாங்கிச் சென்றார்.