BREAKING NEWS

Jun 25, 2013

ரயில் மிதி பலகையில் பயணித்த இருவர் பலி

தண்டவாளத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் ரயில் மிதி பலகையில் பயணித்துக் கொண்டிருந்த குழுவினர், மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயில் மிதி பலகையில் சென்ற ஐவரே இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் களுபோவில மற்றும் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் இன்று (25) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &