தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் தெரிவித்தார்.அத்துடன் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒழுங்கான விசாரணைகள் பாதுகாப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டுவிட்டர் சமூக இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.