கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த தேரர் , இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மிருககொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மரணமான தேரர் முன்னாள் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் தற்போதைய கடும்போக்கு சின்ஹல ராவைய அமைப்பின் உறுப்பினரும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இவர் ஹம்பாதோட்டை மாவாட்ட சின்ஹல ராவைய அமைப்பின் பொறுப்பாளராக செயல்பட்டதாகவும் தெரிய வருகிறது .