BREAKING NEWS

Jan 13, 2013

பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கு கையொப்பம் இட்டார் ஜனாதிபதி

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மஷிச்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார்.

குறித்த பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த அறிக்கைப் பத்திரம் இன்று (13) பிற்பகல் பிரதம நீதியரசரின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழுவால் முன்வைக்கப்பட்ட குற்றப் பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று கடற்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &