BREAKING NEWS

Sep 21, 2012

ஆயிரக் கணக்கில் ஊர் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்


அல்ஹம்துலில்லாஹ்!!!  ALIFFALERTS ஏற்பாட்டின் கீழ் பறகஹதெனிய மக்களது ஒத்துழைப்புடனும் இரண்டு ஜும்ஆப் பள்ளிவாயல்களின் உதவியூடனும் ஆயிரக் கணக்கில் மக்கள்  ஒன்று சேர்ந்து அன்பு நபியவர்களை அவமதித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முஸ்லிம்களுக்கு சர்வதேச ரீதியில் இழைக்கப்படும் அநியாயங்களை எதிர்த்தும் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பறகஹதெனியவில் இடம்பெற்றது.

பெருந்திரலான மக்கள் கூட்டத்தால் கண்டி குருநாகல் வீதி சுமார் ஒரு மணிநேரம் மூடி வைக்குமளவூக்கு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் முழு பறகஹதெனிய இளைஞர்களும் மும்முரமாக இந்த விடயத்தில் ஈடுபட்டதுடன், சுமுகமான முறையில் எவருக்கும் பாதிப்பேற்படாத வகையில் சிறப்பாக இட ம்பெற்றமையையிட்டு ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் முதற்கண் அல்லாஹ்வூக்கும், அடுத்தபடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சகலருக்கும், உதவி நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும், தமது உயரிய ஒத்துழைப்புக்களை தந்துதவிய இரு ஜும்ஆப் பள்ளிவாயல்களின் மௌலவிமார்கள், உட்பட நிர்வாகத்தினருக்கும், அனுசரனைகளை தந்துதவிய சகலருக்கும், ALIFFALERTS தமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் ஆரப்பாட்டத்தின் வீடியோ காட்சிகளை எமது ALIFFALERS TV ஊடாக காணக்கூடியதாகவூள்ளது என்பதையூம் தெரிவித்துக்கொள்வதுடன், இன்றிரவூ  HIRU TV, SWARNAVAHINI, CHANNEL EYE  தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் எமது ஆரப்பாட்டம் பற்றிய செய்திகள் அவர்களது செய்தியறிக்கைகளில் ஒளிபரப்பப்படவூள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &