கொழும்பு, புளுமென்டல் வீதியில் வைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலக்கத்தகடு பொறிக்கப்படாத காரொன்றில் வந்த இனந்தெரியாத சிலர் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மேற்படி நபர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.