BREAKING NEWS

Feb 14, 2014

திஹாரியை கடந்த சிங்கள ராவய ஆர்ப்பாட்ட பேரணி

Thihariya News
மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று மாலை திஹாரிய நகரை வந்தடைந்தது.

இதன் போது கொழும்பு கண்டி பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த்ததை அவதானிக்க முடிந்தது.

கடந்த த 9ம் திகதி காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாலிருந்து ஆரம்பமான இப்பேரணி எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி மாளிகையைச் சென்றடையவுள்ளது.

இன்னும் ஒரு வார காலத்தினுள் மாடறுப்பு நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இன்னும் பல உயிர்த் தியாகங்களை எதிர்க்கொள்ள வேண்டி வரும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடும்போக்கு பெளத்த அமைப்புக்களில் ஒன்றான சிங்கள ராவய அமைப்புக்கு இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &