BREAKING NEWS

Aug 18, 2013

நாளை நள்ளிரவுக்கு பின்னர் தரம் 5 புலமைப் பரிசில் வகுப்புகளுக்கு தடை

நாளை நள்ளிரவுக்கு பின்னர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோன்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும், கையேடு விநியோகிக்கும் நடவடிக்கை ஆகியவற்றும் பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பில் தகவலறியும் பட்சத்தில் பொலிஸாரிடம் முறையிடுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &