
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று இரவு பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் தற்பொழுது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த தாக்குதலில் இப்திகார் ஜமால் தாக்கப் பட்டுள்ளதுடன், முன்னாள் நகர சபை உறுப்பினர் டஹ்லான் மன்சூர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஹிருனிகா ஆகியோருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.


