கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
27,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை சீர்குலையச் செய்ய நூல்பாவை தலைவர் ஒருவருக்கு இடமளிக்க முடியாதென்றும், பொது வேட்பாளரின் கொள்கை ´கூட்டாக்கம்´ என்றும் அதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.
´ஒன்றாக உண்டு குடித்து இருந்துவிட்டு பங்கு குறைந்ததால் இப்போது அவதூறு பேசுகிறார்´ என்றும், .´ராஜபக்ஷகள் இறுதியில் விகாரை அமைத்து வணங்கப்பட வேண்டியவர்கள். ஊழல் மோசடி இருந்தால் முன்னரே சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது´ என்றும் தேரர் தெரிவித்தார்.
ரத்ன தேரர் பௌத்தர்களின் பிரச்சினை குறித்து பேசினால் நன்று எனவும், இந்தளவிற்கு தீவிரமாகியிருக்கத் தேவையில்லை எனவும் ஞானசாரர் சுட்டிக்காட்டினார்.(ரி)